அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டப்பிங் சீரியல்கள் இறக்குமதியால் தமிழ் கலைஞர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு டப்பிங் சீரியல்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி விஜய் டி.வி. அடுத்த அதிரடியை ஆரம்பிக்கிறது. தனித்தனி நேரங்களில் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியர்களை காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை தொடர்ச்சியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கு காவிய நேரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
காலை 8 மணிக்கு மகாதேவ், 9 மணிக்கு சீதையின் ராமன், 9.30 மணிக்கு மங்கையின் சபதம், 10 மணிக்கு கிரன்மாலா, 10.30க்கு என்னுடைய தோட்டத்தில், 11 மணிக்கு அம்மா, 11.30க்கு என்றும் அன்புடன் என தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிறது. வருகிற அக்டோபர் 3ந் தேதி முதல் தொடங்கும் இந்த காவிய நேரம் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும்.