மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆஸ்கர் விருது என்பது முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் விருது. ஒரே ஒரு விருது மட்டும் சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் விருது பெறுவதற்காக உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து எண்ணற்ற படங்கள் போட்டியில் கலந்து கொள்ளும். வருடா வருடம் இந்தியாவிலிருந்தும் படங்கள் போட்டியில் கலந்து கொள்கின்றன. தமிழில் இருந்து கடைசியாக 2000-ஆம் ஆண்டில் ஹேராம் படம் கலந்து கொண்டது.
அதற்கு முன், தெய்வமகன் (1969), நாயகன் (1987), அஞ்சலி (1990),தேவர் மகன் (1992), குருதிப்புனல் (1995), இந்தியன் (1996), ஜீன்ஸ் (1998) ஆகிய படங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்தப்பட்டியலில்தான் இப்போது விசாரணை படம் இடம்பிடித்துள்ளது. ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது மட்டுமல்ல, 3 தேசிய விருதுகளையும் வென்றது விசாரணை.
இப்போது மேலும் ஒரு சாதனையாக, இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படமாக 'விசாரணை' தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்களில் மணிரத்னம் இயக்கிய படங்கள் இரண்டு முறையும், ஷங்கர் இயக்கிய படங்கள் இரண்டு முறையும், கமல் நடித்த படங்கள் ஐந்துமுறையும் இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் தகவல். இந்தப்பட்டியலில் இப்போது வெற்றிமாறனும் இடம்பெற்றுள்ளார்.