இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்றைக்கு முன்னணயில் இருக்கும் பல ஹீரோக்கள் ரஜினி படத்தின் தலைப்பையும் அவர் பேசிய பன்ச் டயலாக்கையும் தங்களின் படத்துக்கு சூட்டுவதன் மூலம், ரஜினியின் புகழில் குளிர் காய்கிறார்கள். இந்த பட்டியலில் தற்போது சூர்யாவும் சேர்ந்துள்ளார். 'சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்-3 படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா!
இந்தப்படத்தை கே.ஈ.ஞான்வேல் ராஜாவின் 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனமும், சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. சூர்யா நடிக்கும் 35-ஆவது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு படையப்பா படத்தில் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்கான 'தானா சேர்ந்த கூட்டம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படத்தலைப்புகளை படப்பிடிப்பு துவங்கி பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டும் நிலையில்தான் அறிவிக்கின்றனர். இந்த வழக்கத்துக்கு மாறாக சூர்யா நடிக்கும் இப்படத்தின் தலைப்பை படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாகவே அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சூர்யா நடிக்கும் படத்துக்கு ரஜினி படத்தின் பன்ச் டயலாக்கை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதை ரஜினியின் ரசிகர்கள் ரசிக்கவில்லை போலிருக்கிறது. சமூகவலைத்தளங்களில் சூர்யாவையும், விக்னேஷ் சிவனையும் கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர். இப்பவே இப்படின்னா போகப்போக என்னவெல்லாம் கமெண்ட் வரப்போவுதோ தெரியலையே...