'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோகளில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து உள்ளவர் ஜான் ஆபிரகாம். இவர் நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி சாதாரண வசூலை தந்தப்படம் ‛டிஷூம் '. இப்படத்தில் ஜான் ஆபிரகாம் உடன் வருண் தவனும் நடித்து உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டில் ஜானிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் ஏன் சுயசரிதை படங்களில் நடிப்பதே இல்லை என்று கேட்டனர்.
இதற்கு ஜான் ஆபிரகாம் கூறியதாவது..." நான் அனைத்து வகையான கதைகளிலும் நடித்து இருக்கிறேன். எனக்கு ஆக்சன் கதை தான் பிடிக்கும். வாழ்க்கை வரலாறு சார்ந்தப்படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. ரசிகர்களுக்கு நான் ஆக்சன் ஹீரோவாக இருப்பது தான் பிடிக்கும்" என்றார்.
ஜான் ஆபிரகாம் தற்போது நடித்து வெளிவரயிருக்கும் படம் போர்ஸ்-2 . இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.