‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேற்றுடன்(செப்டம்பர் 22) திரை உலகில் 38 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளார். இதனை மெகா குடும்ப ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படமான “ப்ரனம் ஹரீடு” 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி வெளிவந்தது. இயக்குனர் கே.வாசு இயக்கத்தில், தயாரிப்பாளர் கரந்தி குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.
நடிகர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பன்முகத்தன்மைக் கொண்ட சிரஞ்சீவியின் நடனத் திறமைக்கே ரசிகர்கள் ஏராளம். 1978ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த சிரஞ்சீவி படிப்படியாக டோலிவுட்டின் மெகா ஸ்டாராக உயர்ந்தார். பத்து முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ள சிரஞ்சீவி, நான்கு முறை ஆந்திர அரசின் நந்தி விருதினை வென்றுள்ளார். மேலும் 2006ல் இந்திய அரசு சிரஞ்சீவிக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.
சிரஞ்சீவி அறக்கட்டளை வாயிலாக பல நலதிட்ட உதவிகளை செய்து வரும் சிரஞ்சீவி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு எம்.பியாகயும் பணியாற்றியுள்ளார். தற்காலிகமாக அரசியல் ஒய்வு கொண்டுள்ள சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் ஹிட்டான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகிவருகின்றது. 2017 பொங்கலுக்கு இத்திரைப்படம் திரைக்கு வரும் என இயக்குனர் விவி விநாயக் கூறியுள்ளார்.