பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'தர்மதுரை' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஆண்டவன் கட்டளை' படம் இன்று வெளியாகிறது. 'காக்கா முட்டை, குற்றமே தண்டனை' படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் நாயகியாக 'இறுதிச் சுற்று' படத்தின் நாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்து வெளிவரும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் தயாராக உள்ள 'இறுதிச் சுற்று' ரீமேக்கில் வெங்கடேஷுடன் நடிக்க உள்ளார்.
'ஆண்டவன் கட்டளை' படத்தில் ரித்திகா சிங் பத்திரிகை நிருபராக நடித்துள்ளார். நாயகியாக நடித்திருந்தாலும் இன்னும் படத்தின் ஒரு காட்சியைக் கூடப் பார்க்கவில்லை என ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
“ஆண்டவன் கட்டளை' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. நான் மிகவும் பதட்டமாகவும், கவலையாகவும் உள்ளேன். படத்தின் ஒரு காட்சியைக் கூட இதுவரை நான் பார்க்கவில்லை. அதனால், படம் எப்படி வந்துள்ளது என்பது எனக்குத் தெரியாது. அதனால், படத்தைப் பார்த்ததும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் கமெண்ட்டுகளுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் காத்திருக்கிறேன்,” என சற்று முன் டிவீட்டியுள்ளார்.
படத்தில் நாயகியாக நடித்த எனக்குக் கூட படத்தைக் காட்டவில்லை என்பதை எந்த அளவிற்கு நாசூக்காக சொல்லியிருக்கிறார். யாருக்கும் படத்தைக் காட்டக் கூடாது என்பது இயக்குனரின் கட்டளையாக இருக்குமோ...படத்திற்குப் பணம் போட்ட தயாரிப்பாளராவது படம் பார்த்தாரா...? .