டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். அதையடுத்து கெளதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கிய அவர், தனது அடுத்த படத்தையும் தனுஷை வைத்தே இயக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தனது மூன்றாவது படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை ஐஸ்வர்யா தனுஷ். தனது தந்தை ரஜினியின் சுயசரிதையை எழுதத் தொடங்கி விட்டார். அதோடு, நேரம் வரும்போது அப்பாவின் வாழ்க்கை வரலாறை அவரை வைத்தே படம் இயக்குவேன் என்றும் கூறிவருகிறார்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் பெண்கள் நல ஐ.நா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ், அடுத்தபடியாக தான் இயக்கும் படத்தை பெண்கள் சம்பந்தப்பட்ட கதையில் இயக்கப்போகிறாராம். நவீன பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த படம் உருவாகிறதாம். மேலும், ஜோதிகா, அமலாபால் மாதிரியான சில மாஜி ஹீரோயினிகளுக்கு அந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ்.