டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‛விசாரணை' படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது வெற்றிமாறனை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன்... ‛‛ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படத்தை தேர்வு செய்த தேர்வுக்குழுவுக்கு நன்றி. கதாசிரியர் சந்திரகுமாருக்கு நன்றி, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கதை மற்றும் திரைக்கதை மீது அதிகம் நம்பிக்கை இருந்தது. இதன்மூலம் எனக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது. அடுத்தகட்ட முயற்சிக்கு விசாரணை படம் ஊக்கம் அளித்துள்ளது. நான் திட்டமிட்டு எதையும் செய்வது கிடையாது, அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற மாதிரி தான் கதைக்களம் அமைகிறது'' என்றார்.