'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்திற்குப் பிறகு என்ன படம் வரப் போகிறது என்பதில் கடந்த பல மாதங்களாகவே பெரும் குழப்பம் நிலவி வந்தது. 'ரஜினி முருகன்' பட இசை வெளியீட்டின் போதே அடுத்து 'சண்டக் கோழி 2' தான் என்னுடைய படம் என ஒரு வருடங்களுக்கு முன்பே அறிவித்தார். அதன் பின் 'சண்டக்கோழி 2' படம் டிராப் செய்யப்பட்டுவிட்டது என படத்தின் நாயகன் விஷாலே அறிவித்தார். லிங்குசாமி, தெலுங்கு ஹீரோவான அல்லு அர்ஜுன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியானது.
அதன்பின் அதுவும் இல்லை, லிங்குசாமிக்கும், விஷாலுக்கும் சமரசம் ஆகிவிட்டது மீண்டும் 'சண்டக் கோழி 2' ஆரம்பமாகப் போகிறது என செய்திகள் உறுதியாகவே வெளியாகின. அல்லு அர்ஜுன் படத்தை தள்ளி வைத்துவிட்டுத்தான் லிங்குசாமி, 'சண்டக் கோழி 2' படத்தை இயக்க உள்ளார் என்றார்கள். இப்படி மாறி மாறி வந்த செய்திகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கின் இளம் ஹீரோவான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கப் போகும் படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர்களை அழைத்து அறிவித்தார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி கடைசியில்தான் ஆரம்பமாகப் போகிறது. அதற்குள் விஷால் நடிக்கும் 'சண்டக் கோழி 2' படத்தை முடித்துவிடுவேன் என லிங்குசாமியே அறிவித்தார்.
“ தமிழில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக கடந்த 10 வருடங்களாகக் காத்திருந்தேன். அதனால்தான் என்னுடைய தெலுங்குப் படங்களையும் இங்கு டப்பிங் செய்யவில்லை. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் பொருத்தமான ஒரு கதையை லிங்குசாமி சொன்னதால் இந்தப் படத்தை ஆரம்பிக்கிறோம். மற்ற விவரங்கள் படத்தின் பூஜையின் போது சொல்கிறோம்,” என தெள்ளத் தெளிவான தமிழில் சொன்னார் அல்லு அர்ஜுன்.
இந்தப் படத்திற்காக பல 'வித்தை'களைக் கற்றுக் கொண்டு தமிழுக்கு வருகிறார் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னதுதான் விழாவின் ஹைலைட். 'அஞ்சான்' படத்தின் 'மொத்த வித்தை'யையும் ரசிகர்கள் மறந்திருப்பார்களா என்ன?.