பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனியை தமிழ் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்காது.. பத்திருபது வருடங்களுக்கு முன் 'பூவிழி வாசலிலே', 'சூரியன்' என தமிழில் கொடூர வில்லனாக மிரட்டியவர், இந்த தலைமுறை இளம் ரசிகர்களுக்கோ 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'காக்கா முட்டை' படங்களின் மூலம் சாதுப்பசுவாக அறிமுகமாகி இருக்கிறார். தற்போது தமிழ், மலையாளம் இரண்டிலும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் பாபு ஆண்டனி, கடந்த வாரம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த அமெரிக்கர் ஒருவரிடம் இந்த விழா முழுவதும் மலையாளத்தில் நடப்பதால் உங்களுக்கு போரடிக்கவில்லையா என கேட்டாராம் பாபு ஆண்டனி. அதற்கு அந்த நபர் சுத்தமான மலையாளத்தில் பதில் சொல்ல அசந்துபோனாராம் பாபு ஆண்டனி. அந்த நபருக்கு மலையாளத்தில் எழுத, படிக்க, பேச என மூன்று விஷயங்களும் அத்துப்படியாம்.. இதையெல்லாம் விட அவர் அடுத்து சொன்னதுதான் பாபு ஆண்டனியை திகைக்க வைத்து விட்டதாம்..
அதாவது பல வருடங்களுக்கு முன் அந்த அமெரிக்கர் கேரளாவில் கோழிக்கோட்டில் மூன்று வருடங்கள் தங்கி இருந்தாராம்.. அப்போது முதன்முறையாக ஏதேச்சையாக பாபு ஆண்டனி நடித்த 'சாந்தா' என்கிற படத்தை பார்த்தாராம். அதில் அவரின் நடிப்பு பிடித்துவிட, அதன்பின் பாபு ஆண்டனி நடித்த படங்களை தேடித்தேடி பார்க்க ஆரம்பித்தும் விட்டாராம். அதுமட்டுமல்ல, பாபு ஆண்டனியின் படங்களை பார்த்துதான் மலையாளத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்ததால் அவர்தான் தனக்கு ஆசான் என்றும் சொல்லியிருக்கிறார். நமக்கு இப்படி ஒரு அமெரிக்க ரசிகரா என்கிற வியப்பு மாறாமல் ஊர்வந்து சேர்ந்தாராம் பாபு ஆண்டனி..