'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆரம்பம், பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இந்திய அளவில் அறியப்படும் நடிகராகிவிட்டார். பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா, டுவிட்டரில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றார். டுவிட்டரில் ராணாவை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளது. இத்தகவலை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராணா, ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ராணா, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் லீடர்-2, இயக்குனர் தேஜா இயக்கத்தில் நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.