அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான நம்ரதா, தனது மகன் கௌதம் கிருஷ்ணா, மகள் சித்தாராவுடன் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சுடிதார் துப்பட்டாவால் தலையை மூடிய படி நம்ரதா கோவிலிருந்து தனது குழந்தைகளுடன் வெளியே வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. பிரபலங்கள் பலரும் திருப்பதிக்கு சென்று வருவதும், தங்கள் திரைப்படங்கள் வெற்றியடைய தலைமுடியை காணிக்கையாகக் கொடுப்பதும் வாடிக்கையே.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தின் உடல் நலம் குணமடைய வேண்டி தனது தலைமுடியை திருப்பதி பெருமாளுக்கு காணிக்கையாகக் கொடுத்தார். தற்போது டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி தனது தலைமுடியை காணிக்கையாக கொடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆனால் வட இந்திய பெண்ணான நம்ரதா அம்முறைப்படி, தலையில் துப்பட்டா அணிந்திருந்தாரா? அல்லது உண்மையில் கேசம் இல்லாத தலையை மறைக்க துப்பட்டா அணிந்திருந்தாரா? என்று ஒரு புறம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்க, நம்ரதாவிற்கு அப்படி என்ன வேண்டுதல்? எனும் கேள்விக்கு பதில் தேடும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.