நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
அஞ்சான் படத்தின் தோல்வி இயக்குநர் லிங்குசாமியை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. அந்தப்படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒருபக்கம், மற்றொருபுறம் தான் தயாரித்த படங்களை வெளியிட முடியாத சூழல் மற்றொருபக்கம் என கடும் சிரமத்திற்கு உள்ளானார். இருப்பினும் அவர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. அடுத்தப்படியாக விஷாலை கொண்டு சண்டக்கோழி-2வை இயக்க உள்ளார்.
மற்றொருபுறம் தெலுங்கு ஸ்டைலிஷ் மன்னன் அல்லு அர்ஜூனை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இதுப்பற்றிய பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடந்து வந்தது. ஒருக்கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாக கூட செய்திகள் வந்தது. ஆனால் அந்த செய்திகள் அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. லிங்குசாமி - அல்லு அர்ஜூன் இணையும் படம் உறுதியாகியிருக்கிறது.
சென்னையில் இவர்கள் இணையும் படத்திற்கான அறிமுக விழா நடந்தது. இதில் அல்லு அர்ஜூன், லிங்குசாமி, படத்தை தயாரிக்கவுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, 2டி ராஜசேகர், பிருந்தா சாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிவக்குமார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் பேசியதாவது... ‛‛தமிழ் மீடியாக்களுக்கு வணக்கம். தமிழில் பேச வேண்டும் என்ற முடிவோடு வந்துள்ளேன். அதனால், தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். தெலுங்கில் 15 படங்கள் வரை நடித்துவிட்டேன். ஆனால் தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். சொல்லப்போனால் என் சொந்த ஊரே சென்னை தான். 20 வருடமாக சென்னையில் இருந்துள்ளேன்.
தமிழில் ஒரு நல்ல அறிமுகத்திற்காக காத்திருந்தேன். நிறைய கதைகள் கேட்டேன். லிங்குசாமி சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. தெலுங்கு சினிமாவில் இருப்பவர்களும் லிங்குசாமி படத்தில் நடிப்பது நல்ல அறிமுகம் என்றார்கள். இதுதான் நமக்கு சரியான தருணம் என்று இந்தப்படத்தின் கதையை ஓகே சொல்லிவிட்டேன். இந்தப்படம் தமிழில் எனக்கு ஒரு நல்ல அறிமுகத்தை தரும் என்று நம்புகிறேன். நம்ம ஊரில் பிறந்து, நம்ம ஊரில் சாதிக்கிற கிக் வேறு எதிலும் இருக்காது.
பருத்திவீரன் போன்று ஒரு கதையில் நடிக்கலாமே என்கிறார்கள். அது ஒரு கிளாசிக் படம், மேஜிக் போன்றது. அதுமாதிரி என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப்படம் நல்ல படமாக வந்து வெற்றி பெறணும் வேண்டி கொள்கிறேன்'' என்று பேசினார்.
அல்லு அர்ஜூன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழியில் இப்படம் தயாராக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார்.