'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர் குட்டி ரேவதி. சித்த வைத்தியரான குட்டி ரேவதிக்கு தமிழில் மிகவும் ஆர்வம். இதனால் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு காஞ்சனை திரைப்பட இயக்கத்தில் இணைந்து திரைப்படங்கள் குறித்து பேசவும், எழுதவும் ஆரம்பித்தார். ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய ரசாயன ரோஜாக்கள் என்ற ஆல்பத்துக்கு பாடல் எழுதினார்.
அதன் பிறகு மரியான் படத்தில் பாடல் எழுதினார். தொடர்ந்து நயன்தாரா நடித்த மாயா உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இதுவரை சுமார் 50 பாடல்களை எழுதியுள்ள ரேவதி தற்போது அருவி, 8 தோட்டாக்கள் படத்தில் முழு பாடல்களையும் எழுதியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே சினிமா இயக்க வேண்டும் என்பது குட்டி ரேவதியின் லட்சியம். அதற்கான வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது. இதில் சமுத்திரகனி ஹீரோவாக நடிப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. படம் இயக்கும் பணியில் தீவிரமா இறங்கியுள்ள குட்டிரேவதி விரைவில் அந்த அறிவிப்பை முறைப்படி வெளியிட இருக்கிறார்.