'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இரவு நேரங்களில் கம்போஸிங், ரெக்கார்ட்டிங் வேலைகளை செய்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். அவரைத் தொடர்ந்து அனிருத்தும் பகலில் தூங்கி இரவு முழுக்க கண்விழித்து இசைப்பணியாற்றி வருகிறார். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் அன்புத்தொல்லைகள் அதிகமாக இல்லாமல் இருப்பதால் இரவு நேரத்தை நான் இசைக்காக செலவிட்டு வருகிறேன் என்கிறார் அனிருத்.
இந்நிலையில், இரவு பறவையாகி விட்ட அனிருத், தான் இசையமைத்துள்ள ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பேயோ போபிலியா -என்ற ஒரு பேய் பாடலை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் அவரது தம்பியாக நடித்த ரிஷிகேஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் பேய் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். சிம்பு-அனிருத் கூட்டணிக்கு இந்த பாடல் சூப்பர் ஹிட்டாக அமையும் என்கிறார்கள்.