ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தாகவும், இதனால் அவர் தயாரிப்பாளர் சங்கத்தை அவமதித்து விட்டதாகவும், அவர் மீது ஏன் சட்ட நடவடிக்கை கூடாது என்று கேட்டு தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு விஷால் தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் என் கட்சிக்காரர் அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறார். வார இதழுக்கு பேட்டி அளித்தது உண்மைதான். அதில் சங்கத்திற்கு எதிராக எந்த கருத்தையும் கூறவில்லை. அதில் சங்க விதிகள் எதுவும் மீறப்படவில்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும், ஊர் கூடிர் தேர் இழுப்பது போன்ற பழமொழிக்கு ஏற்ப இயங்கி வருகிறார்.
இந்த விளக்கத்துக்கு பிறகும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி எதிர்கொண்டு வழக்கை நடத்த தயாராக இருக்கிறார். இவ்வாறு விஷாலின் வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.