இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். ஓய்வு நேரத்தில் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். எந்த மொழியில் நடித்தாலும் தனக்குப் பிடித்தமான படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தற்போது சில நேரங்களில் நடித்து முடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடிப்பில் வெளியான 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இப்படங்களின் வெற்றியில் பிரகாஷ்ராஜின் பங்களிப்புக்கும் முக்கிய பங்குண்டு.
இதை மனதில் வைத்து அடுத்து இயக்கும் படத்திலும் பிரகாஷ்ராஜுக்கு ஒரு முக்கிய கேரக்டர் வழங்கியுள்ளார் மோகன் ராஜா! மூன்றாவது முறையாக பிரகாஷ் ராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இது குறித்து ட்வீட்டரில் தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.