ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். ஓய்வு நேரத்தில் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். எந்த மொழியில் நடித்தாலும் தனக்குப் பிடித்தமான படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தற்போது சில நேரங்களில் நடித்து முடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடிப்பில் வெளியான 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இப்படங்களின் வெற்றியில் பிரகாஷ்ராஜின் பங்களிப்புக்கும் முக்கிய பங்குண்டு.
இதை மனதில் வைத்து அடுத்து இயக்கும் படத்திலும் பிரகாஷ்ராஜுக்கு ஒரு முக்கிய கேரக்டர் வழங்கியுள்ளார் மோகன் ராஜா! மூன்றாவது முறையாக பிரகாஷ் ராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இது குறித்து ட்வீட்டரில் தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.