'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமந்தாவுக்கு, சினிமா மீது திடீரென விரக்தி வந்து விட்டது போலிருக்கிறது. புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்காக யார் வந்தாலும், வந்த வேகத்தில், அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார். இத்தனைக்கும், இந்தாண்டில் அவர் நடித்த, தெறி, ஜனதா கரேஜ் போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. ஆனாலும், புதிய படங்களில் நடிக்க தயக்கம் காட்டுகிறார் அவர். 'தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யப் போவதால் தான், படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்' என, கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமில்லையாம். தன்னை தேடி வரும் படங்களின் கதைகள், உப்பு சப்பில்லாமல் இருப்பதால் தான், நடிக்க மறுக்கிறாராம். 'இனிமேல் படங்களில் நடித்தால், நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு, அந்த படத்தின் கதை இருக்க வேண்டும். மரத்தை சுற்றி டூயட் பாடும் வேடங்களில் இனி நடிக்க மாட்டேன்' என, கூறி வருகிறாராம். சமந்தா.