ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிங்கம் படத்தின் 3 ஆம் பாகமான எஸ்-3 படத்தைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான்! இந்தப் படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என செய்திகள் வந்தன. இதையடுத்து டுவீட்டரில் படத்தின் தலைப்பு வெளியானது. படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை . கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 35 ஆவது படம்.
நானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. நயன்தாரா வேண்டாம் என்று சூர்யா தரப்பினர் சொல்லிவிட்டதால் வேறு நாயகியை நடிக்க வைக்க ஓகே சொல்லிவிட்டார் விக்னேஷ்சிவன். இந்தப் படத்திற்கும் விக்னேஷ்சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் தான் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் குறித்து இன்று மாலை 7 மணிக்கு ட்விட்டரில் வெளியானது. டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்ட நிலையில் படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான , பாட்ஷா படத்தி்ல் அவர் பேசும் வசனம் , இந்த படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதால் டைட்டில் வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.