‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'கபாலி' படம் வருவதற்கு முன்னால் வரை ராதிகா ஆப்தே யார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஹிந்தித் திரையுலகத்தில் அவர் மிகவும் பாப்புலர் ஆனவர், தைரியசாலி எனப் பெயரெடுத்தவர். எதைப் பற்றியும் ஒளிவு, மறைவில்லாமல் வெளிப்படையாக தனது கருத்துக்களைச் சொல்பவர் என ஊடகங்கள் அவரைப் பற்றிப் பாராட்டும்.
சிறந்த நடிகை என்றும் பெயர் வாங்கிய ராதிகா ஆப்தே சமீபத்தில் பாலிவுட்டில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தென்னிந்திய நடிகர் ஒருவரைப் பற்றி ஒரு 'விவகாரமான' விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த நடிகர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. ஏனென்றால் விஷயம் அப்படி?.
“ஒரு முறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் என் ரூம் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு என்னுடன் ‛‛பேச கவர'' முயற்சிக்க விரும்பினார். ஆனால், நான் அவரைக் கடுமையாகத் திட்டிவிட்டேன். அதன் பின் அவர் என்னுடன் சண்டையும் போட்டார். இருந்தாலும் இதுவரை எந்த ஒரு நடிகரும் என்னை அவர்கள் அறையில் தங்கச் சொன்னதில்லை,” என பரபரப்பாகக் கூறியுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் ராதிகா ஆப்தே குறைவான படங்களில்தான் நடித்துள்ளார். 'கபாலி' படத்திற்கு முன்னதாக தமிழில் 'தோனி, வெற்றிச் செல்வன், அழகுராஜா' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'லெஜன்ட், ரத்த சரித்ரா, லயன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ராதிகா ஆப்தே சொன்ன அந்த நடிகர் யாராக இருக்கும்...?.