தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'இருமுகன்' படத்தின் வசூல் 100 கோடியைத் தொடப் போவதாக நேற்றிலிருந்து ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தப்படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியானது. படம் பற்றி பல எதிர் விமர்சனங்களும் வந்தாலும், போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாத காரணத்தாலும், கமர்ஷியலாக படம் ரசிகர்களைக் கவர்ந்ததாலும் படம் வெளியான சில நாட்களிலேயே படம் வெற்றி என தயாரிப்பாளர், வினியோகஸ்தர் இருவரும் சேர்ந்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவித்தனர். அது மட்டுமல்லாமல் அன்று வரை 60 கோடிக்கு மேல் வசூலானது என்ற தகவலையும் அறிவித்தனர்.
தற்போது படம் இரண்டு வாரங்களைத் தொட உள்ள நிலையில் இதுவரை 90 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலாகியுள்ளதாம். நாளை 'தொடரி' படமும், நாளை மறுநாள் 'ஆண்டவன் கட்டளை' படமும் வெளியாக உள்ளதால் 'இருமுகன்' படத்திற்கு நாளை முதல் தியேட்டர்கள் குறைய வாய்ப்புண்டு. இருந்தாலும் மூன்றாவது வாரத்திலும் பல தியேட்டர்களில் படம் தொடர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதனால், 100 கோடி ரூபாய் வசூலை 'இருமுகன்' எட்டிப் பிடிக்கலாம் என்றும் தெரிகிறது.
முதல் நான்கு நாட்கள் வசூலைச் சொன்னவர்கள் 100 கோடி வசூலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா ?.