இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அஜய் தேவ்கன், தன் கனவுப்படமான சிவாய் படத்தை மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாய் இயக்கி, நடித்து, தயாரித்து உள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறம், அஜய், ராதிகா ஆப்தேவை கொண்டு தான் தயாரித்துள்ள பார்ச்டு படத்தின் புரொமோஷனிலும் பிஸியாக உள்ளார்.
சமீபத்தில் பார்ச்டு படத்தின் பிரத்யேக காட்சி, பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதில் அஜய்யின் மனைவியும் நடிகையுமான கஜோலும் பங்கேற்றார். அப்போது அவரிடத்தில் தன் கணவரின் படமான சிவாய் பற்றி கேட்டபோது, கூறியதாவது...
‛‛சிவாய் படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது. படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பைவிட படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கும். சிவாய் பற்றி யாரும் விவரிக்க தேவையில்லை, படமே அதைப்பற்றி பேசும்" என்றார்.
சிவாய் படம் அடுத்த மாதம் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.