தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அருந்ததி உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரமாண்ட படம் ஒன்றை இயக்கி உள்ளார். இதற்கு கன்னடத்தில் நாகரகவு என்றும், தெலுங்கில் நாகாபரணம் என்றும் தமிழில் சிவநாகம் என்றும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் ரம்யா, ராஜேஷ் விவேக், திக்நாத் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். குருகரன் இசை அமைத்துள்ளார், வேனு ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்பாக்ஸ் பிக்சர்ஸ், பிளாக்பஸ்டர் ஸ்டூடியோ மற்றும் பென் மூவீசார் இணைந்து தயாரித்துள்ளனர்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் வழக்கம்போல கோடி ராமகிருஷ்ணானின் பேண்டஸி படம். தன் வாழ்வை சீரழித்தவர்களை சிவபக்தையான ரம்யா சிவநாக உருவம் கொண்டு பழிவாங்குகிற கதை. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் படத்தில் வரும் சரித்திரகால காட்சியில் மன்னராக மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனை நடிக்க வைத்திருப்பதுதான். அதாவது ரீப்ளேஸ்மண்ட் டெக்னாலஜி மூலம் ஒருவர் நடித்த காட்சியில் அவரது தலையை மட்டும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இன்னொருவர் தலையை ஒட்டவைத்து உருவாக்கப்படும் டெக்னாலஜி. விஷ்ணுவர்த்தனின் நடித்த படங்களிலிருந்து அவரது முகபாவனைளை எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழில் உருவான மாற்றான் படத்தில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது. சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்தபோது சூர்யாவுடன் இன்னொரு நடிகர் நடித்திருந்தார். பின்னர் அவரது தலை நீக்கப்பட்டு அந்த காட்சியில் சூர்யாவை தனியாக நடிக்க வைத்து அதை ஒட்டவைத்து காட்சியை உருவாக்கினார்கள். இப்போது அதே டெக்னாலஜியை பயன்படுத்தி விஷ்ணுவர்த்தனை நடிக்க வைத்திருக்கிறார்கள். இதற்காக அவரது மனைவி பாரதியிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்கிறார்கள். இது படத்தில் பேசப்படுவதாக இருக்கும் என்கிறார்கள். தமிழில் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. அடுத்த மாதம் 3 மொழிகளிலும் வெளிவரும் என்று தெரிகிறது.