பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமந்தா-நாக சைதன்யாவின் காதலுக்கு அவர்கள் இரண்டுபேர் வீட்டிலும் எந்தவித எதிர்ப்பும் எழும்பாமல் உடனே ஓகே பண்ணி விட்டார்கள். முக்கியமாக நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனாவின் காதுக்கு இந்த காதல் விவகாரம் சென்றதுமே, நானும் காதலித்துதான் திருமணம் செய்தேன். அதனால் என் மகன் காதலித்ததில் எந்த தவறும் இல்லை என்று மகனின் காதலுக்கு உடனே பச்சைக்கொடி காட்டி வரவேற்றார். அதேசமயம், இந்த காதலுக்கு நடுவே, மதம் ஒரு பிரச்சினையாக நின்று கொண்டிருந்தது. அதனால் எந்த முறைப்படி திருமணம் நடத்தலாம் என்று இரண்டுபேர் தரப்பிலும் பலத்த மெளனம் நிலவியதாம்.
இறுதியில் நாகார்ஜூனாதரப்பில், காதலுக்கு மதம் கிடையாது. இருப்பினும் இரண்டுபேரும் இரண்டு மதத்தினராக இருப்பதால் இரண்டு பேர் மத முறைப்படியும் திருமணத்தை நடத்தி விடலாம் என்று கூறி விட்டாராம். அதனால் சமந்தா-நாகசைதன்யாவின் திருமணம் சமந்தாவின் கிறிஸ்தவ முறைப்படியும், நாகசைதன்யாவின் இந்து முறைப்படியும் நடக்கிறதாம். ஒருவழியாக இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதால் விரைவில் திருமண தேதியை அறிவிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் நாகார்ஜூனா.