பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கொடி படத்தில் இதுவரை இல்லாத புதுமாதிரியான வேற த்ரிஷாவை பார்க்கலாம் என அவரது தாயார் உமா கிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் ‛நாயகி'. தமிழ், தெலுங்கில் உருவான இப்படத்தை த்ரிஷாவின் மானேஜர் கிரிதர் தயாரித்திருந்தார். இந்தப்படத்தில் நடித்தபோது தயாரிப்பாளருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பணப்பிரச்னையால் நாயகி படத்தின் தெலுங்கு, தமிழ் என எந்தவொரு புரொமோஷனிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் படமும் இரண்டு மொழிகளிலும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை த்ரிஷாவை தொடர்பு கொள்ளலாம் என்று அவரை தொடர்பு கொண்டபோது அவரது அம்மா உமா கிருஷ்ணன் தான் போனை எடுத்தார். அப்போது அவர் கூறுகையில், நாயகியை பற்றி எதுவும் பேசாதீர்கள், அந்தப்படத்தை நாங்கள் மறந்துவிட்டோம். பேசிய சம்பளம் தரவில்லை, ஏகப்பட்ட மனகசப்பு, இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். நாயகி படம் தொடர்பாக ஐதராபாத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். விரைவில் இது விசாரணைக்கு வர இருக்கிறது.
நாயகி படத்தை தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் கொடி படம் வெளியாக இருக்கிறது. இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். த்ரிஷா இதுவரை நடித்திராத ஒரு புதுவிதமான ரோலில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான த்ரிஷாவை காணலாம். படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று கூறினார்.