‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் (ANIMAL WELFARE BOARD) தூதுவராக 'கோச்சடையான்' பட இயக்குனரும் ரஜினிகாந்தின் இளைய மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவர் அமர்த்தப்பட்ட தகவல் வெளியானதுமே சௌந்தர்யாவுக்கு எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்தன.
இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பு என்பது ஜல்லிகட்டுக்கு எதிரான ஒரு அமைப்பு என்ற சந்தேகத்தின் பெயரில் பலரும் அந்த பதவியை சௌந்தர்யா ஏற்க கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். சமூகவலைத்தளங்களிலம் இது குறித்த கோரிக்கை வலுத்து வருகிறது. உச்சகட்டமாக திருச்சியில் இன்று சௌந்தர்யாவின் படத்தை எரித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பதவி குறித்து ஒரு விளக்கத்தை சௌந்தர்யா சார்பில் அவரது மக்கள் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
என்ன இருக்கிறது அதில்?
''சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் நிபுணத்துவம் பெற்றவர். இவரை தற்போது ANIMAL WELFARE BOARD எனும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளது. சௌந்தர்யாவின் வேலை திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா? அல்லது கிராஃபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவது தான்! அவருக்கு அந்த அமைப்பு இந்த பதவி வழங்க காரணம் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவம, மற்றும் 'கோச்சடையான்' படத்தை இயக்கிய அனுபவம் இருப்பதால் தான்'' என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இனமேலாவது சௌந்தர்யாவுக்கு எதிரான விமர்சனங்கள் அடங்குகிறதா பார்ப்போம்...!