Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிவின்பாலி பட தயாரிப்பாளருக்கு துல்கர் பட பாணியில் நேர்ந்த திகில் அனுபவம்..!

20 செப், 2016 - 16:14 IST
எழுத்தின் அளவு:
a-diffrent-experience-to-the-producers-of-nivin-pauly-in-dulquar-movie

நிவின்பாலி நடித்த சூப்பர்ஹிட் படமான 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் நோபிள் தாமஸ். இளைஞரான இவர் நேற்று முன் தினம் இரவு கொச்சியில் இரவுக்காட்சி ஒன்றை பார்த்துவிட்டு தனது மனைவியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.. அப்போதுதான் ஒரு டாடா மேஜிக் ஆட்டோவில் இருவர் தங்களை சில நிமிடங்களாக தொடர்ந்து வருவதை கவனித்தார். அவர்கள் மீது சந்தேகம் வலுக்கவே, உடனே தனது காரை யூ டர்ன் அடித்து திருப்பி, வந்தவழியே செலுத்த ஆரம்பித்தார்..


இவர் சந்தேகப்பட்டது போலவே, அந்த வாகனமும் யூடர்ன் அடித்து குறிப்பிட்ட இடைவெளியில் இவரது காரை தொடர ஆரம்பித்தது. இவர் காரை நிறுத்தினால் அவர்களும் நிறுத்தினார்கள். நிலைமை சீரியஸ் ஆவதை உணர்ந்த நோபிள் தாமஸ், தனது சகோதரர்களுக்கு போன் செய்து விபரம் சொல்லி, வழியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு சொல்லிவிட்டு சில நிமிடங்களில் எதிர்ப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் வண்டியை நிறுத்தியுள்ளார்.. அதற்குள் அவரது சகோதரர்களும் வந்துவிட, உஷாரான மர்ம நபர்கள் சட்டென தங்களது வாகனத்துடன் எஸ்கேப் ஆகினர்.


அதன்பின் நடந்தது தான் நோபிள் தாமஸை ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டதாம். அதாவது நடந்த விபரங்கள் பற்றி அங்கிருந்த போலீசாரிடம் சொல்லி அந்த மர்ம நபர்களின் வாகன எண்ணையும் தர, இரவு நேரம் லேட்டாகிவிட்டது காலையில் வாருங்கள் விசாரிக்கலாம் என அனுப்பி விட்டார்களாம்.. காலையில் சென்றதற்கு இது எங்கள் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் வராது, உங்களுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுங்கள் என தட்டிக்கழித்தார்களாம்..


ஆனால் நோபிள் தாமஸ் இதை விடுவதாக இல்லை.. தனக்கு தெரிந்த மேலிட அதிகாரியிடம் போனில் விபரம் சொல்லவே, உடனே அங்கிருந்து உத்தரவு வர, அதன்பின் தான் போலீஸார் இவரிடமிருந்து புகாரை வாங்கியதுடன் மரியாதையாகவும் நடத்தினார்களாம். இதுகுறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நோபிள் தாமஸ், “இதுவே அந்த காரில் இரண்டு இளம்பெண்களோ, அல்லது தனியாக ஒரு இளம்பெண்ணோ பயணித்திருந்தால் அவர்களால் நல்லபடியாக வீட்டிற்கு போய் சேர்ந்திருக்க முடியுமா..? காவல்துறையின் சிஸ்டம் தான் என்ன..? ஏதாவது அசம்பாவிதம் நடந்தபின்னர்தான் நடவடிக்கை எடுப்பார்களா” என குமுறியுள்ளார். அத்துடன் இனி மற்றவர்களும் உஷாராக இருக்க சம்பந்தப்பட்ட ஆட்டோவின் பதிவெண்ணையும் குறிப்பிட்டுள்ளார்..


சில மாதங்களுக்கு முன் துல்கர் நடிப்பில் வெளியான 'கலி' படமும் இதுபோன்ற சம்பவத்தை மையபடுத்தியே அமைக்கப்பட்டு இருந்தது.. கணவன் மனைவியான துல்கர்-சாய் பல்லவி இருவரும் நள்ளிரவு வேளையில், ஆளரவமற்ற சாலையில் காரில் செல்லும்போது, பின் தொடர்ந்து வரும் லாரி ட்ரைவரால் அவர்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டது..? அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை.. இப்போது அதேபோன்ற சம்பவம் நிஜத்திலும் நிகழ்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in