துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
'த்ரிஷ்யம்' என்கிற ஒரே படம் மூலம் மலையாளத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் அறியப்படும் பிரபல இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. பிருத்விராஜை வைத்து இவர் இயக்கிய 'ஊழம்' படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து மோகன்லால், மம்முட்டி, திலீப் என மூன்று ஸ்டார்களின் படங்களை தனித்தனியாக இயக்கவுள்ளார் ஜீத்து ஜோசப். குறிப்பாக மம்முட்டி நடிக்கும் படத்தை அடுத்து இயக்குவார் என்பதுதான் பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், ஒரு புதிய திருப்பமாக தனது மனைவி எழுதும் கதையை திரைப்படமாக எடுக்க இருக்கிறாராம் ஜீத்து ஜோசப்..
ஜீத்து ஜோசப்பின் மனைவி லிண்டா.. இவர் ஜீத்து ஜோசப் இயக்கிய 'மை பாஸ்' படத்தில் இருந்து தனது கணவரின் படங்களில் ஆடையலங்கார நிபுணராக பணியாற்றி வருகிறார். அத்துடன் தனது கணவருடனான கதை விவாதத்திலும் அவ்வப்போது கலந்துகொள்வது வழக்கமாம். அந்தவகையில் தற்போது அவரே ஒரு கதையை எழுதி வருகிறாராம். கிட்டத்தட்ட அதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் நிலையில் இருக்கிறாராம். அதனால் தனது மனைவி எழுதும் கதையை தானே இயக்குவதோடு, அந்தப்பத்தை சொந்தமாக தயாரிக்கவும் உள்ளாராம் ஜீத்து ஜோசப்.. கதை முழுமையான பின்னர்தான் நடிகர் நடிகைகளை பற்றி தீர்மானிக்க உள்ளார்களாம். மேலே சொன்ன மூன்று நடிகர்களின் படங்களில் ஏதேனும் ஒன்று ஆரம்பிக்க தாமதமானாலும் கூட இந்தப்படத்தை துவங்கிவிடுவாராம் ஜீத்து ஜோசப்.