ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடித்துள்ள 'சிங்கம் 3' அதாவது 'எஸ் 3', படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தில் சூர்யா ஆந்திர போலீஸ் அதிகாரியாகத்தான் நடித்துள்ளார். அதனால்தான் இந்தப் படத்தை விசாகப்பட்டிணம், ஐதராபாத் ஆகிய ஊர்களில் மிக அதிகமாக நடத்தினார்கள். தமிழ்நாட்டிலும் படப்பிடிப்பு நடத்தினால்தான் அதைத் தமிழ்ப் படம் என்று சொல்ல முடியும் என்பதால் பெயருக்கு சில பாடல்களையும், ஒரு சில காட்சிகளையும் மட்டும் இங்கு படமாக்கியுள்ளார்கள்.
தமிழை விட தெலுங்கில் இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றி பெற வைக்க 'எஸ் 3' குழுவினர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். சூர்யாவின் தம்பி கார்த்தி தெலுங்கில் 'ஊப்பிரி' படத்தில் நேரடியாக நடித்து வெற்றி பெற்றுவிட்டார். சூர்யாவும் நேரடித் தெலுங்குப் படத்தில் ஏற்கெனவே நடிக்க வேண்டியது, ஆனால், அவை சரியாக அமையவில்லை. அதனால் 'எஸ் 3' படத்தை இரண்டு மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.
தெலுங்கில் 'எஸ் 3' படம் வெளியாகும் போதுதான் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தற்போது நடித்து வரும் 'தனி ஒருவன்' படத்தின் ரீமேக்கான 'துருவா' படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார். 'துருவா' படமும் போலீஸ் கதை என்பதால் மற்றொரு போலீஸ் கதையான 'எஸ் 3' படம் வெளிவந்தால் அது தனது படத்திற்குப் போட்டியாக இருக்கும் என ராம் சரண் கருத வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, 'சிங்கம், சிங்கம் 2' படங்களை இயக்குனர் ஹரி தெலுங்குப் படங்கள் போலத்தான் தமிழிலும் எடுத்திருந்தார். அந்தப் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வசூலைக் கொடுத்த படங்கள். அதனால்தான் 'எஸ் 3' படத்தை நேரடியாகவே தெலுங்கில் எடுத்து வெளியிடுகிறார்கள்.
'எஸ் 3' படம் டிசம்பர் 16ல் வெளிவந்தால் ராம் சரணுக்கு மேலும் சிக்கல். அவர் இதற்கு முன் நடித்து வெளிவந்த 'ப்ரூஸ் லீ' படம் வேறு படுதோல்வியடைந்தது. அதனால் அவர் 'துருவா' படத்தை மாபெரும் வெற்றி பெற வைக்கும் முயற்சியில் இருக்கிறார். எனவே 'எஸ் 3' படம் தெலுங்கில் டிசம்பர் மாதம் வெளியாவதை அவர் விரும்ப மாட்டார் என டோலிவுட்டில் சொல்கிறார்கள். சிரஞ்சீவியின் குடும்பம் தெலுங்குத் திரையுலகத்தில் செல்வாக்கு வாய்ந்த குடும்பம். எனவே, 'எஸ் 3' தெலுங்கு வெளியீட்டிற்கு அங்கு சிக்கல் வரலாம் என இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.