ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட், தற்போது தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார். இந்தமாதம் இப்படம் வெளியாக இருப்பதால் இதன் புரொமோஷன் வேலைகளில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை அடுத்து சுசாந்த் சிங், அபிஷேக் கபூர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
‛பிட்டூர்' படத்தின் தோல்விக்கு பிறகு வேறு ஒரு கதையை ரெடி பண்ணி அதை சில நடிகர்களிடம் சொல்லி கால்ஷீட் கேட்டு வந்தார் அபிஷேக். ஆனால் அவர் சொன்ன கதை யாருக்கும் பிடிக்காத நிலையில் சுசாந்த் சிங்கிற்கு அந்த கதை பிடித்து போக இப்போது இருவரும் இணைவது உறுதியாகியிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் ஆரம்பமாக உள்ளது. ரோனி ஸ்குருவாலா தயாரிக்க இருக்கிறார்.