தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரகாஷ்ராஜை பொறுத்தவரை தமிழ்சினிமாவை தவிர்த்து, தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர். அதேசமயம் அவ்வளவாக மலையாள திரையுலகம் பக்கம் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.. அவர் சினிமாவுக்குள் வந்த இந்த 23 வருடங்களில் மலையாளத்தில் வெறும் எட்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.. கடைசியாக 2000ல் அமல் நீரத் டைரக்சனில் பிருத்விராஜுடன் 'அன்வர்' என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்.. இப்போது ஆறு வருடம் கழித்து மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இந்தப்படத்தின் பெயர் 'அச்சாயன்ஸ்'. அச்சாயன் என்றால் கேரள கிறித்துவர் என்று அர்த்தம். மலையாள சினிமாவில் கிறித்துவ கதாபாத்திரங்களை, குறிப்பாக வயதில் மூத்தவர்களை 'அச்சாயன்' என்று சொல்லித்தான் அழைப்பார்கள்.. இந்தப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் சரோஜா மற்றும் பரமசிவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயராமும், பிரகாஷ்ராஜும் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.. ஜெயராமுக்கு சமீபத்தில் வெளியான 'ஆடுபுலியாட்டம்' என்கிற 100 நாள் வெற்றிப்படத்தை கொடுத்து, சரிந்துகிடந்த அவரது மார்க்கெட்டை உயர்த்தி பிடித்த கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.