பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் நகைச்சுவை நடிகர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சந்தானம் இனி நடித்தால் ஹீரோதான் என்பதை சில வருடங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார். 'தில்லுக்கு துட்டு' படத்தை வாங்கிய பலரும் 'துட்டு' பார்த்துவிட்டதால் இனி சந்தானம் ஹீரோ நாற்காலியில் இருந்து இறங்கி வரவே மாட்டார். வடிவேலு இப்போதுதான் இறங்கி வந்து 'கத்திச் சண்டை'யில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் வந்த பின்னும் அவர் நகைச்சுவை நடிகராக மட்டுமே இருக்க வாய்ப்பில்லை. 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் மீண்டும் நாயகனாக பிஸியாகிவிடுவார்.
அதனால், தற்போதைக்கு சூரி பக்கமும் ஆர்ஜே பாலாஜி பக்கமும்தான் காற்று வீசுகிறது. சூரியும் சிவகார்த்திகேயன் படத்தில் மட்டுமே சிரிக்க வைப்பார். மற்ற படங்களில் அவர் நகைச்சுவை என்று சொல்வதை ரசிகர் கூட்டம் சீரியசாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 'நானும் ரௌடிதான்' படத்தில் கொஞ்சம் கலகலக்க வைத்த ஆர்ஜே பாலாஜி, மணிரத்னம் படத்தில் நடிக்கும் வரை சென்றுவிட்டார். சதீஷ் பற்றி சொல்லவே வேண்டாம். அவரை தன்னை நகைச்சுவை நடிகன் என சொல்லிக் கொள்ள மாட்டார்.
இவர்களுக்கு அடுத்து பின்னாடியே கருணாகரன் ஓடிக் கொண்டிருக்கிறார். 'இருமுகன்' படத்தில் நடித்தது மாதிரி இரண்டு காட்சிகளில் மட்டும் நடிக்காமல் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவரும் மற்றவர்களுக்கு சரியான போட்டியாக இருக்கலாம். இப்போது அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனை காத்திருக்கிறது. அஜித் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூரி பக்கமும், பாலாஜி பக்கமும் வீசும் காற்று கருணாகரன் பக்கமும் தற்போது வீசியுள்ளது. இன்னைக்கு டிவிட்டர் டிரென்டிங்கில கருணாகரன் கண்டிப்பாக வந்துவிடுவார். அஜித் படமாயிற்றே...கேட்கவா வேண்டும்.