ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மீடியாக்களை கண்டால் ஒதுங்கிப்போகும் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சில தினங்களுக்கு முன் 'இருமுகன்' படத்தின் சக்சஸ் மீட்டில் பலந்து கொள்ள வந்தபோது, மீடியாக்களுடன் தனிப்பட்டமுறையிலும் சிறிது நேரம் பேசினார். அப்போது இருமுகன் படத்தைவிட தன்னுடைய புதிய ஸ்டுடியோ பற்றியே அதிகம் பேசினார்.
மின்னலே படத்திற்கு இசையமைப்பதற்கு முன்னரே தன்னுடைய வீட்டில் சின்னதாக ஒலிப்பதிவு கூடம் வைத்திருந்தார். பிரபலமான பிறகு நவீன கருவிகளை வாங்கி தன்னுடைய ஸ்டுடியோவை அப்ட் செய்து கொண்டே வந்தார். இந்நிலையில், உலகத்தரத்தில் 'STUDIO-H' எனற நவீன ஒலிப்பதிவு கூடத்தை இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கட்டியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இந்த ஒலிப்பதிவு கூடம் உலக தரத்தில் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து அதி நவீன இசை கருவிகளை நிறுவி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
“இந்த ஒலிப்பதிவு கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து இசை அமைக்க முடியும். சினிமாவில மீண்டும் 'லைவ் இசை'யை கொண்டு வரவேண்டும் என்பது என் ஆசை! 'இரு முகன்' படத்தின் பெரும்பாலான இசை பணிகள் இந்த ஸ்டுடியோவில் தான் நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவு கூடத்தின் அதிகாரபூர்வமான திறப்பு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது'' என்று சொன்னார் ஹாரிஸ் ஜெயராஜ்! இதற்கிடையில் ஒலிப்பதிவு கூடம் சொந்தமாக கட்டினால் அந்த இசையமைப்பாளர் பட வாய்ப்பை இழந்துவிடுவார் என்ற சென்ட்டிமென்ட் தகவல்கள் காதுக்கு வருகின்றன.
வருடத்துக்கு 30 படங்கள் பண்ணிக் கொண்டிருந்த தேவா தன் வீட்டில் அம்மா டாக்கீஸ் என்ற ஸ்டுடியோவை தொடங்கிய பிறகு பட வாய்ப்பு இல்லாமல் போனது. அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு அதேதான் நேரந்தது. உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை என பிசியாக இருந்த சிற்பி தன்னுடைய வீட்டில் ஒலிப்பதிவு கூடத்தை அமைத்தார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
தெலுங்கு தமிழ் என பிசியாக இருந்த எஸ்.ஏ.ராஜ்குமாரும் தன்னுடைய வீட்டில் ஒலிப்பதிவு கூடத்தை வைத்த பிறகு காணாமல்போனார். வித்யாசாகர், பரத்வாஜ் ஆகியோரும் சொந்தமாக ஒலிப்பதிவு கூடம் அமைத்த பிறகு மார்க்கெட் இழந்தனர். இந்த தகவல்களை எல்லாம் கேட்டு ஹாரிஸ் ஜெயராஜ் கலக்கம் அடைந்திருப்பதாக கேள்வி.