பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா அவரது கணவர் அஸ்வினை பிரியப்போவதாக வெளியான செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது. அதையடுத்து நலம்விரும்பிகள் செளந்தர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அஸ்வினைப்பற்றி அவர் எந்த குறையும் சொல்லவில்லையாம். அவர் நல்ல வர்தான். எங்களது காதல் உண்மையானது. ஆனால் அவர் வீட்டு நபர்கள்தான் எனக்கு பிரச்சினையே. அவர்களை எவ்வளவோ அனுசரித்து நடந்து வந்தேன். முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோதுதான் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார் செளந்தர்யா.
இருப்பினும், ரஜினி குடும்பத்தினர் அஸ்வின்-செளந்தர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க எடுத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டதாம். அதோடு என் சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் கூறி விட்டாராம். இந்த நிலையில் தனது டுவிட்டரில், மகன் வேத் கிருஷ்ணா மணலில் அமர்ந்து விளையாடும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள செளந்தர்யா, இனிமேல் இவன் மட்டும்தான் என் வாழ்க்கை என்று கூறியுள்ளார்.
இன்று செப்டம்பர் 20-ந்தேதி செளந்தர்யா ரஜினிக்கு 32-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.