'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தனுஷின் தந்தையான டைரக்டர் கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படம் என் ராசாவின் மனசிலே. அந்த படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடித்தார். அதேபோல் இப்போது தனுஷ் இயக்கும் முதல் படமான பவர் பாண்டி படத்திலும் அதே ராஜ் கிரணே நாயகனாக நடிக்கிறார். அதேசமயம், கஸ்தூரிராஜா ராஜ்கிரணை கிராமத்து நாயகனாக காண்பிக்க, தனுஷோ பேண்ட் சட்டை போட்ட நகரத்து நாயக னாக காண்பிக்கிறார்.
இந்த பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சிறைச்சாலை செட்டில் படமாக்கப்படுகிறது. இதில் சிறைச்சாலைக்குள் இருந்து ராஜ்கிரண் வெளியே வருவது போன்ற படமாக்கப்படுகிறது. ராஜ்கிரணே பெரிய நடிகர் என்றபோதும் ஒரு டைரக்டராய் தனது கதைக்கு எந்த அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்து வருகிறார் தனுஷ். மேலும், வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில், தனுஷ் நடித்த திருடா திருடி படத்தை இயக்கிய சுப்ரமணியசிவாவும் தனுசுடன் இணைந்து ஒர்க் பண்ணி வருகிறார்.