ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித்தை பற்றிய இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் சமூக வலைதளங்களில் இந்த செய்தி தான் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டு இருக்கிறது. உலகிலேயே மிகவும் பணக்கார நாடான புருனே நாட்டின் இளவரசி, அஜித்தை பார்க்க ஆசைப்படுகிறாராம்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ஒரு தனிப்பாதையை வகுத்து அதில் பயணித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித், தற்போது தனது 57-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சிறுத்தை சிவா மூன்றாவது முறையாக அஜித்தை இயக்குகிறார். இதன்படப்பிடிப்புகள் மும்முரமாய் வெளிநாடுகளில் நடந்து வருகிறது.
உலகில் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள் புருனே மன்னர்களும், அவர்களது வாரிசுகளும் தான். சமீபத்தில் இந்நாட்டில் உலகின் வைர முதலாளிகளுக்கான விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விருந்தில் பல நாட்டு பாடல்களும் இசையமைபக்கப்பட்டது. அப்போது அஜித் நடித்த ‛வேதாளம்' படத்தில் இடம்பெற்ற ‛ஆளுமா டோலுமா...' பாடலும் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தப்பாட்டு யாருக்கு பிடித்ததோ இல்லையோ அந்நாட்டு இளவரசிக்கு மிகவும் பிடித்து போய் விட்டதாம்.
உடனே தனது உதவியாளர்களை அழைத்து அந்தப்பாடல் பற்றிய விபரங்களை கேட்டதாகவும், அப்பாட்டில் ஆடிய அஜித்தை பற்றிய விபரங்களையும் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அஜித்தை பற்றி பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்ட இளவரசிக்கு அஜித்தை மிகவும் பிடித்து போய் விட்டதாம். இதனால் அஜித்தை பார்க்கும் ஆவலில் அவர் இருப்பதாகவும், அவரை சந்திப்பிதற்கான வேலைகளும் நடந்து வருவதவாகவும் கூறப்படுகிறது.