தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏறக்குறைய அமைதிப்படை கதை மாதிரிதான் இருக்கிறது விஜய் ஆண்டனியின் செயலும். சதாரணநிலையிலிருந்த சத்யராஜ் எம்.எல்.ஏ. , மந்திரி என்று உயரும்போது மெல்ல மெல்ல அவருடைய கேரக்டரும் மாறும். அதேபோல்தான் விஜய் ஆண்டனியும். இசையமைப்பாளராக இருந்தது முதல் 'பிச்சைக்காரன்' படத்தில் நடிக்கும்போதுவரை அடக்கமாக இருந்தார்.
பிச்சைக்காரன் படத்தின் கமர்ஷியல் வெற்றி அவரை அடியோடு மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து தற்போது 'சைத்தான்' பட த்தில் நடித்து வருகிறார் விஜய் ஆன்டனி. இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய் ஆண்டனிக்கும் அப்படத்தின் இயக்குநருக்கும் இடையில் நடைபெற்ற பனிப்போர் வெளியே தெரிய வந்திருக்கிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படத்தில் விஜய் ஆண்டனியின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததாம்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சொன்ன கதையில் இம்ப்ரஸ்ஸாகித்தான் அவரது இயக்கத்தில் நடிக்க முன் வந்தார் விஜய் ஆண்டனி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கதையை மாற்றி தன்னுடைய ஐடியாவை படத்தில் திணித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சைத்தான் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ளாஷ்பேக்கில் முக்கிய கேரக்டரில் ஒரு நடிகர் நடித்திருக்கிறார். அந்தக் கேரக்டரிலும் தானே நடிக்க விரும்பிய விஜய் ஆண்டனி, இயக்குநருக்கு தெரியாமலே படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட இயக்குநர் வெறுத்துப்போய்விட்டாராம்.