தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
திரையுலகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு காதல் ஜோடியும் அவர்களது காதலைப் பற்றி வெளியில் சொல்வதில்லை. ஆனாலும், அப்படிப்பட்ட காதல் விவகாரம் எப்படியோ மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்து விடும். காதேலே இல்லையென்றாலும் பொருத்தமான ஜோடிகளாகத் திரையில் தெரிபவர்களை, நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க வைத்த பெருமை மீடியாவுக்கும் உண்டு. இல்லாததைக் கூட எழுதி எழுதியே வர வைத்துவிடுவார்கள்.
ஆனால், தற்போதைய ஒரு காதல் விவகாரம் மட்டும் தொடர்ந்து 'இருக்கு, ஆனா இல்லை' என்ற பாணியிலேயே இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே நாகசைதன்யா, சமந்தா காதலைப் பற்றி தமிழ், தெலுங்கு ஊடகங்கள் மாறி மாறி எழுதிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் சம்பந்தப்பட்ட இருவரும் அது பற்றி வாயைத் திறந்து எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்து வருகிறார்கள். இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யா அடுத்த வருடம் தான் திருமணம் என்றார். அது சமந்தாவுடனா என்பது பற்றி வழக்கம் போல் சஸ்பென்ஸ் வைத்தார்.
சமந்தா, பிரதியுஷா என்ற சமூக சேவை நிறுவனம் மூலம் பலருக்கு உதவிகளைச் செய்து வருகிறார். அதன் சார்பாக திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் பயன்படுத்திய ஆடைகளை விரைவில் ஏலம் விட உள்ளார். இது தொடர்பாக அவர் போட்ட டிவீட்டை மறக்காமல் நாக சைதன்யா ரி-டிவீட்டும் செய்துள்ளார். மனதுக்குப் பிடித்தவர் நல்ல விஷயங்களை செய்யும் போது பாராட்டும் குணம் காதலில் உள்ளவர்களுக்கு அதிகமாகவே வரும்.
நாகசைதன்யாவுக்கும் அப்படித்தான் வந்ததோ..இன்னும் காதலைச் சொல்ல ஏன் இவ்வளவு தயங்குகிறார்களோ...?