அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்பதும் அதுவும் சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்பதும் அறிவிப்பாக வெளியான நாளில் இருந்து 'கபாலி' ரேஞ்சுக்கு படத்திற்கான கமர்ஷியல் வேல்யூவும், எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.. குறிப்பாக இந்தப்படத்தில் மலையாள சினிமாவில் உள்ள இளம் முன்னணி நடிகர்கள் சிலரும், குணச்சித்திர நடிகர்கள் சிலரும் தங்களுக்கும் ஒரு கதாபாத்திரம் ஒதுக்கவேண்டும் என நட்பு ரீதியாக கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.
ஆனால் இப்படி கோரிக்கை எதுவும் விடுக்காமலேயே இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் மலையாள எவர்கிரீன் சாக்லேட் ஹீரோவான குஞ்சாக்கோ போபன். ஆம்.. லூசிபர் என்கிற இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் உள்ளே வந்ததே ஒரு தனிக்கதைதான். அதாவது சில மாதங்களுக்கு முன் மறைந்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, தான் 'லூசிபர்' என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக திட்டமிட்டிருந்தார்.. அதில் அவரது ஆஸ்தான நடிகரான குஞ்சாக்கோ போபனுக்கும் ஒரு கேரக்டர் வைத்திருந்தார்..
ஆனால் தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் அந்தப்படத்தின் டைட்டிலை மட்டும் கேட்டு பெற்றுக்கொண்டதோடு, கதாசிரியர் முரளி கோபி உதவியுடன் புதிதாக திரைக்கதை அமைத்தும் உள்ளார் பிருத்விராஜ். ஆனால் படத்தின் மைய கருத்தை மட்டும் மாற்றவில்லை.. அத்துடன் ராஜேஷ் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் விதமாக குஞ்சாக்கோ போபனுக்காக உருவாக்கப்பட்டிருந்த கேரக்டரில் அவரையே நடிக்க ஒப்பந்தமும் செய்துவிட்டார் பிருத்விராஜ்.