தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நம் படைப்பாளிகள் பலருக்கு எப்போதுமே தேசிய விருதை தாண்டி ஆஸ்கர் விருதையும் குறிவைக்கும் எண்ணம் உள்ளுக்குள் கனன்றுகொண்டே தான் இருக்கும். அதனாலேயே கமர்ஷியல் அம்சங்களை குறைத்துக்கொண்டு கருத்தை சொல்லும் படங்களை மட்டுமே கருத்தாக எடுப்பதில் அக்கறை காட்டுவார்கள்.. ஆனால் ஆஸ்கர் விருது இன்னும் அவர்களை பொறுத்தவரை கானல் நீராகவே உள்ளது.. இன்னும் சிலருக்கோ ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் பட்டியலில் தங்கள் படம் தேர்வாகும் அளவுக்காவது இருக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும்.. அப்படி தேர்வானலே கூட ஆஸ்கர் விருது கிடைத்தது போன்ற திருப்தியை அடைந்துவிடுவார்கள்..
அந்தவகையில் மலையாள நடிகை கீது மோகன்தாஸ். இரண்டு வருடங்களுக்கு முன் இயக்குனராகவும் மாறி 'லையர்ஸ் டைஸ்' என்ற படத்தை இந்தியில் இயக்கியிருந்தார். ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் கூட கலந்துகொள்ள இந்தப்படம் தேர்வாகியது. ஆனால் விருது கிட்டவில்லை. இந்துமுறை வரும் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுவதற்காக மலையாளத்தில் இருந்து அனுப்பப்படும் பட்டியலில் இயக்குனர் டாக்டர் பிஜூ இயக்கியுள்ள 'காடு பூக்குன்ன நேரம்' படம் தேர்வாகியுள்ளது.
சமூகத்துக்கு பயன்படும் வகையிலான படங்களை மட்டுமே எடுப்பேன் என பிடிவாதமாக படங்களை இயக்கிவருபவர் மலையாள இயக்குனர் டாக்டர் பைஜூ.. அதனாலேயே தேசிய விருது, மாநில அரசு விருது, சர்வதேச திரைப்பட விருதுகள் என பலவற்றை இவரது படங்கள் வாரி குவித்து வருகின்றன.. இவர் படங்களில் பணியாற்றியவர்களுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல நான்கு வருடங்களுக்கு முன் இவர் இயக்கிய 'ஆகாசத்திண்டே நிறம்' படம் கூட ஆஸ்கர் ரேஸில் கலந்துகொள்ள தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித், ரீமா கல்லிங்கலை வைத்து வனத்துறை மற்றும் அதுசார்ந்த மனித உரிமை மீறலை பற்றிய கதையை 'காடு பூக்குன்ன நேரம்' என்கிற படமாக எடுத்திருக்கிறார். இந்திரஜித் போலீஸ் அதிகாரியாகவும், ரீமா மாவோயிஸ்ட்டாகவும் நடித்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் கமர்ஷியலாக வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.. வழக்கமாக இவரது படங்கள் என்றால் கையில் கத்திரிக்கோல் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் சென்சார் போர்டு, ஒரு கட் கூட கொடுக்காமல் வெளியிட அனுமதித்து.. இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஆஸ்கர் ரேஸில் கலந்துகொள்ள போட்டியிட்ட 32 மலையாளப்படங்களில் தேர்வானது இந்த ஒரு படம் மட்டும் தானாம்.