பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கடந்த வருடம் தென்னிந்தியாவில் வெளியான படங்களில் மிகவும் பிரமாண்டமான படமாகவும் அதிக வசூலை ஈட்டிய படமாகவும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ரசிகர்களை கவர்ந்த படமாகவும் அமைந்தது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி'.. இந்தப்படத்தில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும். வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த காளகேயர்கள் என்கிற அம்சமும் அவர்கள் பேசுவதாக அமைக்கப்பட்ட கிளிக்கி மொழி பாஷையும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளிடம் இந்த கிளிக்கி மொழி ரொம்பவே பிரபலமானது.
அதுமட்டுமா..? கொடூரமான உருவங்களுடன் காளகேயர் பாஷை பேசிய அந்த மனிதர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியுமா..? அதிலும் குறிப்பாக அந்த காளகேயர் தலைவனை..? உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அந்த நடிகர் தான் பிரபாகர் என்பவர்.. அந்த கிளிக்கி பாஷைக்கும் தனது வித்தியாசமான உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர் தற்போது அவருக்கு தெலுங்கில் இருந்து மலையாளத்திற்கு சென்று நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது.. அதுவும் சூப்பர்ஸ்டார் மோகன்லால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு. இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார்.