போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
பொதுவாக நடிகைகள் இளகிய மனம் கொண்டவர்கள் என்பதால் தான் விலங்குகள் நல வாரியம், தங்களது தூதர்களாகவும் தங்களது அமைப்பின் ஆதரவாளர்களாகவும் அவர்களையே முன்னிறுத்துகிறது.. ஏற்கனவே த்ரிஷா உள்ளிட்டோர் பிராணிகள் வதைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.. அதேசமயம், நமது பாரம்பரிய விளையாட்டான 'ஜல்லிக்கட்டு' போன்றவற்றின் சிறப்பும், அதன் நோக்கமும் பற்றி துளி கூட அறியாமல் காளைகளை துன்புறுத்தாதீர்கள் என அல்டாப்பாக வாய்ஸ் கொடுத்து தமிழக மக்களிடம் வாங்கியும் கட்டிக்கொள்கின்றனர்..
சமீபத்தில் கூட ரஜினியின் மகள் சௌந்தர்யா இந்த விலங்குகள் நல அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கே இப்படி இருக்க, கேரளாவிலும் இந்த விலங்குகள் நல அமைப்பு நடிகை பார்வதியைக்கொண்டு 'பிராணிகளை பாதுகாக்கவேண்டும்' என்கிற கோஷத்தை முன்னிறுத்தி கேரளாவில் எடப்பள்ளியில் உள்ள மியூசியம் ஒன்றில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதேபோல கேரளாவில் 70 நகரங்களில் இந்த நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பார்வதி, ஒருபோதும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் என பேசியுள்ளதோடு, தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தனது பேச்சை வீடியோவாக பதிவிட்டும் உள்ளார். இவர் மற்ற நடிகைகளைப்போல இந்த விஷயத்தில் சர்ச்சையான கருத்துக்களை கூறாதிருப்பார் என நம்புவோம்.