தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷங்கர் டைரக்சனில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது '2.O'.. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் அக்சய் குமாரும், கதாநாயகியாக எமி ஜாக்சனும் நடித்துவருகிறார்கள். மற்றும் சில கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர நடிகர்களை தேர்வு செய்துள்ளார் ஷங்கர்.. அந்தவகையில் சிறப்பு வாய்ந்த ஒரு கதாபாத்திரத்திற்கு மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான கலாபவன் சாஜனை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலையும் அவரது குடும்பத்தையும் கடைசிவரை மிரட்டி, அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முயற்சி செய்யும் டெரர் போலீஸ் கான்ஸ்டபிள் சகாதேவனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினாரே அவர்தான் இந்த கலாபவன் சாஜன். சொல்லப்போனால் 'த்ரிஷ்யம்' படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்துதான் அவரை தனது படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளாராம் ஷங்கர்.. 'இந்தியன்' படத்தில் நெடுமுடி வேணு, முதல்வன் படத்தில் கொச்சின் ஹனீபா, 'எந்திரன்' படத்தில் கலாபவன் மணி, 'நண்பன்' படத்தில் காமெடி நடிகர் இந்திரன்ஸ் என தனது படங்களில் தவறாமல் ஒரு மலையாள நடிகரை நடிக்க வைத்துவிடும் ஷங்கரின் மலையாள பாசம் நாம் அறிந்ததுதானே..