மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி. பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அவர், தாத்தா, அப்பா போன்று நாடகத்திலும் அக்கறை காட்டினார். பல நாடகங்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் நடத்தினார். சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார் மதுவந்தி.
அவர் இயக்கி நடித்த பெருமாளே... என்ற நாடகத்தை பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி அவரை தர்மதுரை படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க வைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது மதுவந்திக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனாலும் அவர் தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கிறார். ஆர்யா நடிக்கும் கடம்பன் படத்தில் வில்லியாக நடிக்கிறார். கேரளா மற்றும் கொடைக்கானலில் நடந்த இதன் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு விட்டு திரும்பியிருக்கிறர். இது தவிர இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார். அதிலும் மதுவந்தி சிபிசிஐடி போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார்.
இன்னும் சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்திருக்கிறது. நாடக பணி, கல்வி நிறுவன பணிகள் பாதிக்காத அளவிற்கு தொடர்ந்து நடிக்க மதுவந்தி முடிவு செய்திருக்கிறார். இதனால் தனது கேரக்டர்களை கவனமுடன் தேர்ந்தெடுக்கிறார்.