ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எழுத்தாளர் சந்திரா, இயக்குனர் அமீரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றார். அதன் பிறகு கள்ளன் என்ற பெயரில் ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதையே ஒரு குறும்படமாக எடுத்து வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடினார். 4 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இப்போது கரு.பழனியப்பன் நடிக்க படத்தை எடுத்து முடித்துவிட்டார். இதில் கரு பழனியப்பன் ஜோடியாக நிகிதா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் சவுந்தர்ராஜா, நாமோ நாராயணன், முருகன், தினேஷ் சுப்பராயன், ரெஜின் ரோஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எழுத்தளார் வேல.ராமமூர்த்தி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேனி, கம்பம் மலையடிவார பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்தது. கள்ளன் ஒரு ஜாதியை பற்றிய படமா என்பதற்கு இயக்குனர் சந்திரா அளித்துள்ள பதில்...
கள்ளன் என்பது ஜாதியை குறிக்கும் சொல்ல அல்ல. இது ஒரு ஜாதியை பற்றிய கதையும் அல்ல. திருடர்களை கிராமத்து பக்கம் கள்ளன் என்றுதான் குறிப்பிடுவார்கள். அதுதான் படத்தின் தலைப்பு. மலையடிவார கிராமத்தில் வாழும் மக்களுக்கு மலையில் வேட்டையாடுவதுதான் தொழில். வேட்டையாட அரசு தடை விதித்த பிறகு அவர்களுக்கு வேறு தொழில் தெரியவில்லை. அந்த ஊரைச் சேர்ந்த கரு.பழனியப்பனும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஒரே ஒரு திருட்டை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் செய்யும் அந்த ஒரு திருட்டு அவர்கள் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. இதுதான் படத்தின் கதை.
பொதுவாக இதுவரை யாரும் திருடர்களின் இன்னொரு வாழ்க்கையை காட்டியதில்லை. திருடுவது தவறாக இருந்தாலும் திருடர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறதுதானே. அதைப் பற்றி பேசுகிற படம். படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. கே இசை அமைத்திருக்கிறார், எம்.எஸ்.பிரபு, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். மதியழகன் தயாரித்திருக்கிறார். படம் விரைவில் வெளிவரும். என்கிறார் சந்திரா.