டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் தற்போது இயக்கி வரும் படம் ரூபாய். கயல் சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், ஹரிஷ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள், இமான் இசை அமைக்கிறார். சாட்டை படத்தை தயாரித்த இயக்குனர் பிரபு சாலமனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
படத்தை பற்றி அன்பழகன் கூறியதாவது: சாட்டை படத்தை தெலுங்கில் தயாரிக்க டாக்டர் ராஜசேகர் விரும்பினார். அதனால் சில நாட்கள் தெலுங்கு பக்கம் போனேன். சில காரணங்களால் அங்கு படத்தை தொடங்க முடியவில்லை. அதன் பிறகு என்ன பண்ணலாம் என்று யோசித்தபோதுதான் வங்கி கொள்ளை, நகை கடையில் கொள்ளை, வழிப்பறின்னு ஏகப்பட்ட செய்திகளை படித்தேன். பணத்தை கண்டுபிடித்த மனிதனை அந்த பணம் எவ்வளவு அடிமையாக்கி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். மக்கள் ஏன் பணத்துக்கு பின்னால் இப்படி ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை தேடினேன் ரூபாய் கதை உருவானது.
தேனியை சேர்ந்த கயல் சந்திரனும், கிஷோரும் நண்பர்கள். அவர் இருவரும் இணைந்து ஒரு லாரியை லோனுக்கு வாங்கி லோடு அடிக்கிறார்கள். சந்திரன் டிரைவர், கிஷோர் கிளீனர். அந்த லாரிதான் அவர்களுக்கு எல்லாமே. லாரிக்கு தவணை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் தேனியிலிருந்து சென்னை பூ மார்க்கெட்டுக்கு சவாரி கிடைக்கிறது. அந்த லோடுடன் சென்னை வருகிறார்கள். லோடை இறக்கியதும் வீடு ஷிப்ட் பண்ற லோடு ஒண்ணு கிடைக்கிறது. வந்த இடத்துல எக்ஸ்ட்ரா வருமானமாச்சே தவணை கட்ட உதவும் என்று அந்த வேலையை ஏற்கிறார்கள்.
அங்குதான் அவர்களுக்கு பிரச்சினையே ஆரம்பமாகிறது, பணத்துக்கு ஆசைப்பட்ட சென்றவர்கள் சிக்கலை விலைகொடுத்து வாங்குகிறார்கள். படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. பணமும் பணத்தாசை பிடித்த மனிதர்களும் வில்லன்கள். சாட்டையில் கல்வியை சொன்னேன். ரூபாயில் பணத்தை சொல்கிறேன். அதில் வசனங்கள் அதிகம், இதில் வலி அதிகம். என்கிறார் அன்பழகன்.