'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு திரை உலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்வதை அவரது குடும்பதினருடன் இணைந்து மோகன்பாபுவின் நண்பரும் காங்கிரஸ் எம்.பியுமான சுப்ரமணி ரெட்டி பிரம்மாண்ட விழாவாக ஏற்பாடு செய்திருந்தார். நேற்று(செப்டம்பர் 17) மாலை நடைபெற்ற இவ்விழாவில் நடிகை ஸ்ரீதேவி, ஜெயசுதா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், அல்லு அரவிந்த், அல்லு சிரிஷ், தருண், நாக பாபு, தசரி நாராயண ராவ், ராகவேந்திர ராவ், மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜ் மற்றும் பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
டோலிவுட்டில் போட்டியாளார்களாக காணப்படும் சிரஞ்சீவியும் மோகன்பாபுவும் முதன்முறையாக இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் மோகன்பாபுவை வாழ்த்திப் பேசிய சிரஞ்சீவி, தனக்கும் மோகன்பாபுவிற்கும் எவ்வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது, ஆனால் சமூக வலைதளங்கள் அது போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். மேலும் உண்மையில் மோகன்பாபுவுடன் நல்ல நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிய சிரஞ்சீவி, இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கைதி எண் 150 படத்தின் படப்பிடிப்பை இடை நிறுத்திவிட்டு வந்துள்ளதாகவும் கூறினார்.