பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வாரம் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் வெளியான மோகன்லால் நடித்த 'ஒப்பம்' திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகத்தினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்திற்கு இன்னும் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. ஆம், சென்னையில் உள்ள “பாஃப்டா' (BOFTA) திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் இந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவரும், படத்தயாரிப்பு துறையில் திறமையும் பலவருட அனுபவமும் வாய்ந்தவருமான தனஞ்செயன்.
இவர்தான் இந்த “பாஃப்டா“ அகாடமி உருவாக காரணமானவர். இந்த அகாடமியில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை எழுதுதல், சினிமா தயாரிப்பு, தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் சினிமா ஜர்னலிசம் தொடர்பான அனைத்தையும் நவீன தொழில் நுட்பத்துடன் கற்றுத்தர தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன. இதில் பயிலும் மாணவர்களுக்காகத்தான், 'ஒப்பம்' படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்தப்படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரக்கனியும் இந்தக்காட்சியின்போது உடனிருந்தார். படத்தைப் பார்த்த மாணவர்கள் படம் முழுவதும் ஆரவாரத்துடன் கண்டு களித்ததோடு படம் முடிந்ததும், மோகன்லாலையும் சமுத்திரக்கனியையும் பாராட்டித்தள்ளிவிட்டனர். அது மட்டுமல்லாது படம் குறித்த பல விபரங்களை சமுத்திரக்கனியிடம் கேட்டு அறிந்த கொண்டனர