சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். இதில் பல கன்னட நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள். இது பரபரப்பை உண்டாக்கியது. இதே போல மாண்டியாவில் நடந்த விவசாயிகள் மாநாட்டிலும் பேசினார்கள். தற்போது தேச ஒற்றுமையை குலைக்கும் வகையில் பேசிய கன்னட நடிகர்கள் மீது கோவையை சேர்ந்த தமிழ் தேசிய பேரமைப்பு என்ற அமைப்பின் தலைவர் இளங்கோவன் கோவை 2ம் வகுப்பு ஜூடிசியில் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கன்னட நடிகர்கள் புனித் ராஜ்குமார், உபேந்திரா, தர்ஷன் ஆகியோர் தேச ஒற்றுமைக்கு எதிராக பேசினார்கள். "அரசு எப்போதும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கிறது. இங்கு நமக்கு குடிக்க தண்ணீர் இல்லாதபோது அவர்களுக்கு விவசாயத்துக்கு திறந்து விடுகிறது" என்று பேசினார்கள். இந்த பேச்சுதான் கர்நாடகாவில் வன்முறை சம்பவங்கள் நடைபெற காரணம். இந்த பேச்சு தமிழ் மற்றும் கன்னட மக்களிடையே பகை உணர்வை வளர்க்கும் விதமாக உள்ளது.
எனவே இந்த 3பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 124ஏ, 153, 153ஏ, 153பி ஆகிய பிரிவின் கீழ் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்று கூறியிருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை அடுத்த மாதம் 3ந் தேதிக்கு தள்ளி வைத்தது. கன்னட நடிகர்களின் பேச்சு ஆதாரத்துக்கான வீடியோக காட்சிகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர்கள் மீது தமிழ் நாட்டில் வழக்கு பதிவு செய்திருப்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.